தென்னையினை தாக்கும் காண்டா மிருக வண்டுகளை ஒருங்கிணைந்த முறையில் கட்டுப்படுத்த வழிகள்!!
வேளாண்மை இணை இயக்குநர் ஆலோசனை
புதுக்கோட்டை மாவட்டத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள தென்னை மரங்களில் காண்டாமிருக வண்டு தாக்குதலை ஒருங்கிணைந்த முறையில் கட்டுபடுத்தாலம் என புதுக்கோட்டை மாவட்;ட வேளாண்மை இணை இயக்குநர் இராம.சிவகுமார் ஆலோசனை தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் தென்னைப்பயிர் 11968 எக்டர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. தென்னை சாகுபடியில் காண்டாமிருக வண்டுகள் தாக்குதல் ஆண்டு முழுவதும் இருந்தாலும், ஜூன் முதல் செப்டம்பர் மாதம் வரை தாக்குதல் அதிகமாக இருக்கும்.
நடவு செய்யப்பட்ட தென்னை முதல் வளர்ந்த அனைத்து வயதுடைய தென்னை மரங்களையும் காண்டமிருக வண்டுகள் தாக்கி சேதம் விளைவிக்கும்.
தாக்குதல் அறிகுறிகள்
காண்டாமிருக வண்டுகள் தென்னையின் உச்சியில் விரிவடையாத குருத்துப் பாகத்தில் துளையிட்டு மரத்தின் உள்ளே சென்று மொட்டுப் பகுதியை மென்று விடுகிறது. எஞ்சிய குருத்து விரியும் போது தென்னை மட்டை முக்கோண வடிவில் சீராக கத்தரியால் வெட்டியது போல் தோன்றும்.
மொட்டுப்பகுதியை மென்ற பின் மீதியாகும் மரச்சக்கையை உள்ளே சென்ற துவாரம் மூலம் அடி மட்டையின் இடக்குகளிலிருந்து வெளியே தள்ளுகிறது. சில சமயங்களில் இளம் கன்றுகள் குறுத்து அழிந்து விடுவதனால் மரம் வளர்ச்சி குன்றி காணப்படும்.
கட்டுப்படுத்தும் முறைகள்
தென்னந்தோப்புகளில் சாய்ந்த தென்னை மரங்கள், மக்கும் நிலையில் உள்ள மரம் மட்டைகள், குப்பைகள், பாதிப்படைந்த தென்னை மரங்கள் ஆகியவற்றில் காண்டாமிருக வண்டுகளில் புழுக்கள் உற்பத்தியாகி பெருக வாய்ப்புள்ளதால் அவற்றை தோப்புகளிலிருந்து அப்புறப்படுத்தி தென்னந்தோப்பினை சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.
எருக்குழிகளில் உள்ள காண்டா மிருக வண்டின் முட்டைகள், புழுக்கள் மற்றும் கூட்டுப்புழுக்களை சேகரித்து அழிக்கவும். மேலும் எருக்குழிகளில் மெட்டாரைசியம் அனிசோபிலே என்ற பச்சை மஸ்கார்டைன் எனும் பூஞ்சாணத்தை தெளித்து அதன் புழுப் பருவத்தைக் கட்டுப்படுத்தலாம்.
மரத்தின் குருத்து பாகத்தில் வளர்ந்த வண்டுகள் இருந்தால் கம்பி (அல்லது) சுளுக்கியால் அதனைக் குத்தி வெளியில் எடுத்து கொன்றுவிட வேண்டும். கோடை மற்றும் மழை காலங்களில் அந்தி நேரங்களில் விளக்குப் பொறியினை தென்னந்தோப்பினில் வைத்து வண்டுகளை கவர்ந்தழிக்கலாம்.
ரைனோலியூர் இனக்கவர்ச்சி பொறியினை 2 எக்டருக்கு 1 எண் வீதம் வைத்து வண்டுகளை கவர்ந்தழிக்கலாம். வேப்பங்கொட்டை தூளையும், மணலையும் 1:2 என்ற விகிதத்தில் கலந்து மரம் ஒன்றிற்கு 150 கிராம் வீதம் நடுக்குருத்தின் மூன்று மட்டை இடுக்குகளில் வைக்க வேண்டும்.
ஒரு மண்பானையில் 5 லிட்டர் நீருடன் ஒரு கிலோ ஆமணக்கு புண்ணாக்கு சேர்ந்த கலவையை தோப்பில் வைத்து வண்டுகளை கவர்ந்தழிக்கலாம்.
புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் தென்னை மரங்களை தாக்கும் காண்டாமிருக வண்டுகளை ஒருங்கிணைந்த முறையில் கட்டுப்படுத்தி பயன்பெற வேண்டும் என மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் இராம.சிவகுமார் ஆலோசனை தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க....
விவசாயிகளுக்கு ஊக்கத்தொகையாக ஒரு ஏக்கருக்கு ரூ.8000 தோட்டக்கலைத்துறை அறிவிப்பு!!
20.93 கோடி கிலோ நெல் கொள்முதல் அதிகரிப்பு! கடந்தாண்டைவிட 100 சதவீதம் கூடுதல்!!
தரிசு நிலத்தை சாகுபடி நிலமாக மாற்றினால் ஆழ்துளைக் கிணறு அல்லது குழாய்க் கிணறு அமைத்துத் தரப்படும்!!
மேலும் தொடர்புக்கு....
எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.
மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.
நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......
வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


0 Comments
உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...