Random Posts

Header Ads

30% பணம் செலுத்தினால் போதும் சோலார் பம்பு செட்!! விவசாயிகளுக்கு 70% மானியம் வழங்கும் அரசு!!



30% பணம் செலுத்தினால் போதும் சோலார் பம்பு செட்!! விவசாயிகளுக்கு 70% மானியம் வழங்கும் அரசு!!


திருப்பூா் மாவட்டத்தில் வேளாண்மைப் பொறியியல் துறையின் மூலமாக மானிய விலையில் சூரிய சக்தியால் இயங்கும் பம்ப் செட்டுகள் அமைக்க தகுதியான விவசாயிகள் விண்ணப்பிக்கலாம். இது குறித்து மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத் செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.



70 சதவீத மானியத்தில்  சோலார் பம்ப் செட் 


தமிழக அரசின் வேளாண்மைப் பொறியியல் துறையின் மூலம் முதல்வரின் சூரிய சக்தி பம்ப் செட்டுகள் திட்டத்தின் கீழ் மின் இணைப்பு இல்லாத பாசன ஆதாரமுள்ள விவசாயிகளுக்கு 10 குதிரைத்திறன் வரையிலான மின் கட்டமைப்புடன் சாராத சூரிய சக்தியால் இயங்கும் பம்ப் செட்டுகள் 70 சதவீத மானியத்தில் அமைக்கும் திட்டம் (40 சதவீதம் தமிழக அரசு மானியம் மற்றும் 30 சதவீதம் மத்திய அரசின் மானியம்) செயல்படுத்தப்பட்டு வருகிறது.


இத்திட்டத்தின் கீழ் முதல் தவணையாக 2,000 சூரிய சக்தியால் இயங்கும் பம்ப் செட்டுகள் ரூ.43.556 கோடி மானியத்தில் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


இதில், புதிதாக ஏற்படுத்தப்படும் பாசனத்துக்கான கிணறுகள் நில நீா் பாதுகாப்பான குறுவட்ட பகுதிகளில் இருக்க வேண்டும். இதர பகுதிகளில் ஏற்கெனவே உள்ள பாசன ஆதாரத்தில் டீசல் இயந்திரம் பயன்படுத்தி வரும்பட்சத்தில் அதற்கு மாற்றாக இத்திட்டத்தின் கீழ் சூரிய சக்தியால் இயங்கும் பம்ப் செட்டுகளை அமைத்துக் கொள்ளலாம்.



இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கம்போது சூரிய சக்தியால் இயங்கும் பம்ப் செட்டுகளை நுண்ணீா் பாசன அமைப்புடன் இணைத்திட உறுதிமொழி அளிக்க வேண்டும். வேளாண் பணிகளுக்கு ஆற்றுப்படுகை மற்றும் நீா் நிலைகளில் இருந்து 200 மீட்டருக்குள் கான்கிரீட் காரை இடைப்படாத கால்வாய்களிலிருந்து 50 மீட்டருக்குள் நிலத்தடி நீரை இறைப்பதற்கு அனுமதி கிடையாது.


கூடுதலாக 20% மானியம் 


மேற்கண்ட தொலைவுக்குள் நிலத்தடி நீரை இறைக்க வேண்டுமானால் பொதுப் பணித் துறையிடமிருந்து தடையில்லா சான்று பெற வேண்டும். இதில், ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் பிரிவைச் சோந்த சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு கூடுதலாக 20 சதவீத மானியம் வழங்கப்படுகிறது. 



கலைஞரின் அனைத்து ஒருங்கிணைந்த வேளாண்மை வளா்ச்சித் திட்டத்தின் கீழ் உள்ள கிராமங்களுக்கு முன்னுரிமை அளித்து இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.


இதுதொடா்பான கூடுதல் விவரங்களுக்கு வேளாண்மைப் பொறியியல் துறை உதவி செயற்பொறியாளா் திருப்பூா்: 99427-03222, உதவி செயற்பொறியாளா் தாராபுரம்: 79040-87490, உதவி செயற்பொறியாளா் உடுமலை: 98654-97731 ஆகியோரை தொடா்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS


மேலும் படிக்க....


ஒரு ஹெக்டேர்க்கு ரூ.13,400 விவசாயிகள் தாமாகவே முன்வந்து விண்ணப்பித்து பயன்பெறலாம்!!


பயிர் காப்பீடு 2023 - 24 ஆம் ஆண்டிலிருந்து புதிய மாற்றங்கள் மத்திய அரசு அறிவிப்பு!!


PM Kisan 70 லட்சம் விவசாயிகள் அடுத்த தவணை திட்டத்தில் இருந்து இழக்கப்படலாம்!!


மேலும் தொடர்புக்கு....

 

எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.

 

மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.

 

நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......

வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)

 

Time to Tips – 5

 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Post a Comment

0 Comments