தரமான விதைகளை விவசாயிகள் பயன்படுத்த தனியார் விதைக்கடலை விற்பனையாளர்களுக்கு விதை ஆய்வு துணை இயக்குனர் எச்சரிக்கை!!
அனைத்து தனியார் விதைக்கடலை விற்பனையாளர்களுக்கு தரமான விதைகளை விற்பனை செய்திட விதை ஆய்வு துணை இயக்குனர் எச்சரிக்கை
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து தனியார் நிலக்கடலை விதை விற்பனையாளர்கள் விதைசட்ட விதிகளின்படி, நல்ல முளைப்புதிறன் உள்ள தரமான விதைகளை விவசாயிகளுக்கு விற்பனை செய்திட அறிவுறுத்தப்படுகிறது.
நடப்பு ரபி பருவத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தில் 7400 ஹெக்டேர் அளவில் பரப்பு இலக்கினை தொடர்ந்து, நிலக்கடலை சாகுபடி விவசாயிகள், தற்போது பெய்துவரும் பருவமழையினை பயன்படுத்தி, நிலத்தினை தயார்படுத்தும் பணிகளில் மும்முரமாக ஈடுப்பட்டு வருகிறார்கள்.
இந்நிலையில், நல்ல விளைச்சலை பெற்றிட தரமான விதைகளை விவசாயிகள் பயன்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்படுகிறது. அரசு உரிமம் பெற்ற விதை விற்பனையாளர்கள், விவசாயிகளுக்கு சான்று அட்டை பொருத்திய நிலக்கடலை விதைகளை மட்டுமே வழங்கி விதைச்சட்ட விதிகளின்படி, ரசீது வழங்கி, விற்பனை மேற்கொள்ள வேண்டும். விதை உரிமத்தில், குறிப்பிட்டு இருக்கும் இடத்தில் மட்டுமே இருப்பு வைத்து நல்ல முளைப்பு திறன் உள்ள தரமான விதைகளை விற்பனை செய்ய வேண்டும்.
விதை விற்பனை தடை
குஜராத் மற்றும் பிற மாநில நிலக்கடலை விதைகள், எண்ணெய் தயாரிக்க மட்டுமே பயன்படுத்த வேண்டும். அம்மாதிரி நிலக்கடலை விதைகள், விதை பயன்பாட்டுக்கு விற்பனை செய்வது விதை சட்டத்தை மீறிய செயலாகும். அதேபோல், நிர்ணயிக்கப்பட்ட விலையை விட, கூடுதல் விலைக்கு விவசாயிகளுக்கு விற்பனை செய்யக்கூடாது.
அவ்வாறு, விற்பனை செய்வது ஆய்வில் கண்டறியப்பட்டால், விதை விற்பனை தடை மற்றும் விதைச்சட்ட விதிப்படி நீதிமன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
நிலக்கடலை விவசாயிகள்,நல்ல விளைச்சலை பெற்றிட தரமான விதைகளை பயன்படுத்த வேண்டும். விதையின் தோ்வு மட்டுமே விளைச்சலை நிா்ணயிக்கும். குறிப்பாக நிலக்கடலையில் குறிப்பிட்ட அளவு ஈரப்பதம் இருந்தால் மட்டுமே விதை வேரூன்றி வளர இயலும். இல்லையெனில் முளைக்கும் விதை போதுமான வலுவின்றி முளைத்து தழைக்க இயலாமல் மடிந்து வரும்.
இவ்வாறு இருக்கும் பட்சத்தில் வயலில் பயிரின் எண்ணிக்கையை சமன் செய்ய இயலாது. சீரான பயிா் எண்ணிக்கையைப் பராமரித்தால் மட்டுமே நல்ல மகசூல் கிடைக்கும்.
அவ்வாறு, பராமரித்திட விதையின் தரத்தினை அறிந்து பயிரிட வேண்டும். விதை விவர அட்டையில் காணப்படும் பயிரிட உகந்த பருவம், உகந்த மாநிலம் ஆகிய விவரங்களைச் சரிபாா்க்க வேண்டும். மேலும் விதைகளை வாங்கும் முன்னா் அந்த விதைக் குவியலுக்குரிய முளைப்புத் திறன் பகுப்பாய்வு அறிக்கையினைக் கேட்டு சரிபாா்க்க வேண்டும். விதை விற்பனை செய்ய உரிய ஆவணங்களை சமர்பித்து 5 ஆண்டுகளுக்கு விதை உரிமங்கள் பெறவேண்டும்.
புதுக்கோட்டை ஆலங்குடியில் ஆய்வில் இன்றைய (15.11.22) ஆய்வில், விதை சட்ட விதிகளை மீறிய விற்பனை நிலையங்களில் ரூ. 159.68 லட்சம் மதிப்புள்ள 156.95 மெட்ரிக் டன் நிலக்கடலை விதைகளுக்கு விதை விற்பனை தடை விதிக்கப்பட்டது.
ஆய்வில் மாவட்ட விதை ஆய்வு துணை இயக்குனர் விநாயகமூர்த்தி, விதை ஆய்வாளர்கள் பாலையன், நவீன் சேவியர் மற்றும் முனியய்யா ஆகியோர் இருந்தனர்.
விதை விற்பனை உரிமங்கள் பெற்ற தனியார் விதை விற்பனையாளர்களுக்கான கூட்டத்தில் அனைவரும் விதைசட்ட விதிகளை பின்பற்றி தரமான நிலக்கடலை விதைகளை விற்பனை செய்திடவும், மீறுவோர் மீது விதைச்சட்ட விதிகளின்படி கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கை வழங்கினார்.
மேலும் படிக்க....
சம்பா சாகுபடி செய்யும் நெல் விவசாயிகளுக்கு 50% மானியத்தில் ஒரு ஏக்கருக்கு 1.2 கிலோ உளுந்து விதை!!
விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நானோ யூரியா தெளித்த செயல்விளக்க வயலில் ஆய்வு!!
மேலும் தொடர்புக்கு....
எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.
மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.
நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......
வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
Post a Comment
உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...