சாக்கோட்டை உழவர் பயிற்சி நிலையம் சார்பில் விவசாயிகளுக்கு பயிற்சி!!
சாக்கோட்டை உழவர் பயிற்சி நிலையம் சார்பில் திருவாரூர் மாவட்டம் பின்னவாசல் கிராமத்தில் விவசாயிகளுக்கு கிராமப்புற பயிற்சி நடைபெற்றது. உழவர் விவாதக்குழு அமைப்பாளர் காளிதாஸ் வரவேற்றார். வேளாண்மை துணை இயக்குநர் பாலசரஸ்வதி விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தார்.
அப்போது அவர் நடப்பு சம்பா மற்றும் தாளடி பருவத்தில் நெற் பயிரை தாக்கும் பூச்சிகளை கட்டுப்படுத்தும் முறைகள் மற்றும் நோய் மேலாண்மை பற்றி எடுத்துரைத்தார். உழவர் பயிற்சி நிலைய வேளாண்மை அலுவலர் கண்ணன் பேசுகையில் நெற் பயிரில் சேதம் ஏற்படுத்தும் எலிகளைக் கட்டுப்படுத்தும் முறைகள் மற்றும் மண் பரிசோதனை செய்யும் முறை பற்றி செயல் விளக்கம் செய்து காட்டினார்.
திருவாரூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் ஹேமா ஹெப்சிபா நிர்மலா உயிர் உரங்களின் பயன்பாடுகள் பற்றி எடுத்துரைத்தார். நாற்பதுற்க்கும் மேற்பட்ட விவசாயிகள் இப்பயிற்சியில் பயன்பெற்றனர்.
மேலும் இப்பயிற்சியில் பின்னவாசல் ஊராட்சி மன்ற தலைவர் தியாகராஜன், வேளாண்மை அலுவலர் தரணிதரன். உதவி வேளாண்மை அலுவலர் மாதினி, சிவகுருநாதன் கலந்துகொண்டனர்.
தகவல் வெளியீடு
S.திலகவதி,
வேளாண்மை உதவி இயக்குனர், மதுக்கூர்
தஞ்சாவூர் மாவட்டம்.
மேலும் படிக்க....
புதுக்கோட்டை மாவட்டத்தில் சென்னை விதை சான்று மற்றும் அங்கக சான்று இயக்குனர் திடீராய்வு!!
டெல்டா பகுதி விவசாயிகளுக்கு பொறியியல் துறை மூலம் 50% மானியத்தில் சூரிய வெப்ப காற்று உலர்த்திகள்!!
தமிழ்நாடு நீர்வள நிலவள திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு நெல் வயல் வெளிப்பள்ளி பயிற்சி!!
மேலும் தொடர்புக்கு....
எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.
மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.
நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......
வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
Post a Comment
உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...