தஞ்சை மாவட்டம், மதுக்கூர் மற்றும் பட்டுக்கோட்டை வட்டார விவசாயிகள் குறுவை நெல் பயிர் காப்பீடு செய்ய ஜூலை 31 கடைசி நாள். வேளாண் உதவி இயக்குனர் அறிவிப்பு.


புதுப்பிக்கப்பட்ட பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் நிகழாண்டு சாரீஸ் குறுவை பருவ நெல்பயிருக்கு காப்பீடு செய்ய ஜூலை 31ஆம் தேதி கடைசி நாள் ஆகும். தஞ்சாவூர் மாவட்டத்தில் பயிர் காப்பீட்டு திட்டத்தை செயல்படுத்துவதற்காக தஞ்சாவூர் ஒன்று தொகுதிக்கு உட்பட்ட மதுக்கூர் மற்றும் பட்டுக்கோட்டை வட்டாரங்களுக்கு சீமா பொது காப்பீட்டு நிறுவனம் முதல் ஆண்டு தேர்வு செய்யப்பட்டுள்ளது.



இங்கிலாந்து கேரிப் சிறப்பு பருவத்தில் நெல்பயிருக்கு பயிர் காப்பீடு தொகை ஏக்கருக்கு ரூபாய் 36500 . விவசாயிகள் செலுத்த வேண்டிய பிரிமியதொகை ரூபாய் 730. காப்பீடு செய்ய கடைசி தேதி ஜூலை 31 என உறுதி செய்யப்பட்டுள்ளது. கடன் பெரும் மற்றும் கடன் பெறாத விவசாயிகள் அனைவரும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மூலமாகவோ தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மூலமாகவோ அல்லது பொது சேவை மையங்கள் மூலமாகவோ பதிவு செய்து கொள்ளலாம்.


விவசாயிகள் திட்டத்தின் கீழ் பதிவு செய்யும்போது முன்மொழிவு விண்ணப்பத்துடன் பதிவு விண்ணப்பம் கிராம நிர்வாக அலுவலர் வழங்கும் அடங்கல் சான்று பசலி 14 34 வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க ஒலி நகல் ஆதார் அட்டைநகல் ஆகியவற்றை இணைத்து காப்பீடு செய்து கொள்ளலாம்.


குறுவை நெல் பயிருக்கும் இயற்கை சீற்றங்களால் ஏற்படும் திடீர் பாதிப்புகள் மற்றும் மகசூல் குறைவு ஆகியவற்றை கருத்தில் கொண்டும் விவசாயிகளுடைய கோரிக்கைகளை ஏற்றும் தமிழ்நாடு அரசு வேளாண்மை துறை மூலம் நிகழ்ஆண்டில் குறுவை நெல் பயிருக்கு பயிர் காப்பீடு செய்ய அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.



இயற்கை இடர்பாடுகளான மழை மற்றும் அதிக வெப்பம் போன்றவைகள் தற்போது பயிரின் அறுவடை நேரங்களில் எதிர்பாராத பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. விவசாயிகளை பாதுகாக்கும் நோக்கத்துடன் அறிவிக்கப்பட்டுள்ள காரிப் குறுவை பயிரினை காப்பீடு செய்து விவசாயிகள் பயன்பெற கேட்டுக்கொள்கிறேன்.


இவ்வாறு மதுக்கூர் வேளாண்மை உதவி இயக்குனர் திலகவதி தன் செய்தி குறித்து தெரிவித்துள்ளார். மேலும் தகவல் அறிய தங்கள் பகுதி வேளாண் உதவி அலுவலரை தொடர்பு கொள்ளவும்.


தற்போது குறுவை நடவு மேற்கொள்ளப்பட்டு வரும் ஒலயகுன்னம் கிராமத்தில் விவசாயிகளிடம் பயிர் காப்பீடு குறித்து துண்டு பிரசுரம் வழங்கி  வேளாண் உதவி அலுவலர் முருகேஷ் வேளாண் உதவி இயக்குனர் திலகவதி மற்றும் அட்மா திட்ட சுகிர்தா ஆகியோர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.


தகவல் வெளியீடு

S.திலகவதி,

வேளாண்மை உதவி இயக்குனர், மதுக்கூர்

தஞ்சாவூர் மாவட்டம்.


மேலும் படிக்க....



விவசாயிகளே இனி கவலை வேண்டாம்! மஞ்சள் வண்ண ஒட்டுப்பொறி பூச்சிகளையும் பிடிக்கும் பூச்சிகளையும் கண்காணிக்கும்!!


விதை முதல் அறுவடை வரை தேவையான அனைத்து இடுபொருட்களும் 50 சத மானியத்துடன் முன்னுரிமை!!


பயிர்களில் ஏற்படும் நோய் தாக்கங்கள் பற்றிய வேளாண் கண்காட்சி !!


மேலும் தொடர்புக்கு....

 

எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.

 

மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.

 

நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......

வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)

 

Time to Tips – 5

 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Post a Comment

உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...

Previous Post Next Post