தமிழக முதல்வர் அவர்களால் காணொளி காட்சி வாயிலாக 50 - 100% மானியத்தில் வேளாண் கருவிகள் வழங்கல்!!
மதுக்கூர் வட்டாரத்தில் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களால் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் காணொளி காட்சி வாயிலாக துவக்கி வைத்தார்.
தமிழ்நாடு அரசு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் கீழ் மதுக்கூர் வட்டாரத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட அத்திவெட்டி, விக்ரமம் மற்றும் மதுக்கூர் வடக்கு ஆகிய பஞ்சாயத்துகளில் துவக்க விழா மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களால் காணொலிக் காட்சி வாயிலாக துவக்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் மாண்புமிகு பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அண்ணாதுரை அவர்கள் கலந்துகொண்டு மூன்று பஞ்சாயத்துகளிலும் தேர்வு செய்யப்பட்ட பண்ணை குடும்பங்களுக்கு தலா 3 தென்னங்கன்றுகள் 100 சத மானியத்தில் வழங்குதல்,
75 சதவீத மானியத்தில் 15 விவசாயிகளுக்கு வரப்பில் உளுந்து சாகுபடி செய்ய வம்பன் 8 உளுந்து மற்றும் 50 சத மானியத்தில் கை தெளிப்பான் மற்றும் விசை தெளிப்பானகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.
அத்திவெட்டி மற்றும் விக்ரமம் பஞ்சாயத்துக்களில் பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் பிரபாகர் கலந்துகொண்டு விவசாயிகளுக்கு கைத் தெளிப்பான் மற்றும் தென்னங்கன்றுகளை வழங்கினார்.
விக்ரமம் பஞ்சாயத்து
மதுக்கூர் வட்டார அட்மா திட்ட தலைவர் இளங்கோ அவர்கள் அத்திவெட்டி மற்றும் விக்ரமம் பஞ்சாயத்துக்களில் கலந்துகொண்டு கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் விவசாயிகள் தங்கள் தேவைகளை பதிவு செய்து அனைத்து துறைகளின் ஒருங்கிணைப்புடன் வளர்ச்சி அடைய கேட்டுக்கொண்டார்.
மேலும் பண்ணை குடும்பங்களைச் சேர்ந்த மகளிருக்கு தலா 3 தென்னங்கன்றுகள் வழங்கியதோடு தோட்டக்கலைத் துறையின் கீழ் விவசாயிகளுக்கு வீட்டுக் காய்கறி தோட்ட விதைகள் மற்றும் பழக்கன்றுகளையும் மானியத்தில் வழங்கினார்.
மதுக்கூர் வடக்கு பஞ்சாயத்தில் மாவட்ட கவுன்சிலர் செந்தாமரை ஞானசேகரன் செயலாளர் கோவிந்தராஜ் மற்றும் வட்டார வளர்ச்சிஅலுவலர்கள் செல்வேந்திரன் மற்றும் ராஜு ஆகியோர் கலந்து கொண்டு விவசாயிகளுக்கு தென்னங்கன்றுகள் பழக் கன்றுகள் கைத்தெளிப்பான் களை மானியத்தில் வழங்கினார்.
மதுக்கூர் வடக்கு பஞ்சாயத்து
மூன்று பஞ்சாயத்துகளிலும் 200க்கும் மேற்பட்ட பண்ணை மகளிர் குழு உறுப்பினர்கள் முன்னோடி விவசாயிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். தொடக்க விழா நிகழ்வுக்கான ஏற்பாடுகளை மதுக்கூர் ஊராட்சிமன்ற தலைவர் நாராயணன் விக்ரமம் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் அத்திவெட்டி ஊராட்சி மன்ற தலைவர் ராஜ்குமார் ஆகியோர் செய்திருந்தனர்.
திட்ட அலுவலர்கள் பூமிநாதன், ஜெரால்டு, கார்த்தி, தினேஷ், முருகேஷ், சுரேஷ், சரவணன் மற்றும் கோபி ஆகியோர் விவசாயிகளை புகைப்படம் எடுத்து வேளாண் போர்டலில் பதிவு செய்தனர்.
அட்மா திட்ட அலுவலர்கள் ஐயா மணிராஜ் மற்றும் சிசி பணியாளர்கள் . மற்றும் பட்டுகோட்டை வட்டார காப்பீட்டு அலுவலர்கள் மணி சரண் மற்றும் ராம் ஆகியோர் விழாவிற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்தனர்.
வேளாண் அலுவலர் கார்த்திகா துணை வேளாண்மை அலுவலர் அன்புமணி உதவி விதை அலுவலர் இளங்கோ ஆகியோர் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர். வேளாண்மை உதவி இயக்குனர் திலகவதி அனைவருக்கும் நன்றி கூறினார்.
மதுக்கூர் வடக்கு பஞ்சாயத்தில் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் விவசாயிகளுக்கு பழக் கன்றுகள் மற்றும் தென்னங்கன்றுகளை வழங்கினார்.
மதுக்கூர் வட்டார அட்மா திட்ட தலைவர் இளங்கோ அவர்கள் விவசாயிகளுக்கு தென்னங்கன்றுகளை விக்ரமம் பஞ்சாயத்தில் வழங்கினார்.
பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அண்ணாதுரை மற்றும் வருவாய் கோட்டாட்சியர் பிரபாகர் ஆகியோர் அத்திவெட்டி ஊராட்சி மன்ற விவசாயிகளுக்கு தென்னங்கன்றுகளை மானியத்தில் வழங்கினார்.
தகவல் வெளியீடு
S.திலகவதி,
வேளாண்மை இணை இயக்குனர், மதுக்கூர்
தஞ்சாவூர் மாவட்டம்.
மேலும்
படிக்க....
தமிழக அரசின் இலவச மாட்டுக்கொட்டகை திட்டம் 2022 விண்ணப்பிப்பது எப்படி?
விவசாயிகளுக்கு வட்டியே இல்லாமல் ரூ.3 லட்சம் கடன் வழங்கப்படுகிறதா?
மேலும்
தொடர்புக்கு....
எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற
YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.
மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள்
மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும்
முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.
நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......
வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)
உடனுக்குடன் செய்திகளை
தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக
வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
Post a Comment
உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...