கோடைப்பருவ நெல் சாகுபடியில்  தண்டு துளைப்பான் மற்றும் குலைநோய்த் தாக்குதலை கட்டுப்படுத்துவது எப்படி?


தற்பொழுது நிலவும் தட்ப வெப்பநிலை காரணமாக கோடைப்பருவத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நெற்பயிரில் தண்டு துளைப்பான் மற்றும் குலைநோய்த் தாக்குதல் ஆங்காங்கே காணப்படுகிறது. 


இதனை விவசாயிகள் ஒருங்கிணைந்த முறையில் கட்டுப்படுத்திட வேளாண்மை இணை இயக்குநர் இராம.சிவகுமார் ஆலோசனை தெரிவித்துள்ளார்.



தண்டுத் துளைப்பான்


குருத்துப்பூச்சி எனப்படும் தண்டு துளைப்பானின் தாக்குதலால் இளம்பயிரில் நடுக்குருத்து வாடிக் காய்ந்துவிடும். கதிர் பிடிக்கும் தருணத்தில் தாக்குதல் ஏற்படின் மணி பால் பிடிக்காமல் சாவியாகி வெண்கதிர்களாக மாறி மகசூல் பாதிப்படைகிறது. 


இதன் தாக்குதலைக் கட்டுப்படுத்திட நாற்றுகளை நெருக்கமாக நடுவதைத் தவிர்த்து தேவையான தழைச்சத்தினைப் மூன்று அல்லது நான்கு தடவையாகப் பிரித்து இடுதல் வேண்டும். 


முதிர்ந்த நாற்றுகளை நடும்போது நுனியைக் கிள்ளிவிட்டு நடுவதனால் குருத்துப்பூச்சியின் முட்டைக் குவியல்களைஅழித்துவிடலாம். விளக்குப்பொறியினை மாலை 6.30 மணி முதல் இரவு 10.00 மணிவரை ஒளிரவிட்டுக் குருத்துப்பூச்சியின் தாய் அந்துப்பூச்சிகளைக் கவர்ந்தழிக்கலாம். 



மேலும் அதிகஅளவில் குருத்துப்பூச்சியின் தாக்குதல் இருந்தால், ஏக்கருக்கு கார்டாப் ஹைட்ரோகுளோரைடு 4பு 7.5 கிலோ மண்ணில் இடலாம். அல்லது குளோரான்டிரானிலிபுரோல் 24 ளுஊ 40 மி.லி., புளுபென்டையமைடு 39.45 நுஊ 30 மி.லி. இவற்றில் ஏதேனும் ஒரு மருந்தினை ஒரு ஒரு ஏக்கருக்கு 200 லிட்டர் நீரில் கலந்து தெளித்துக் கட்டுப்படுத்தலாம்.


குலைநோயின் அறிகுறிகள்


நாற்றங்காலில் தொடங்கி அனைத்து வளர்ச்சிப் பருவங்களிலும் குலைநோய் நெற்பயிரைத் தாக்குகிறது. இலைகளின்மேல் வெண்ணிறத்திலிருந்து சாம்பல் நிற மையப் பகுதியுடனும் காய்ந்த ஓரங்களுடனும் கூடிய கண்வடிவப் புள்ளிகள் காணப்படும். பல புள்ளிகள் ஒன்றுசேர்ந்து பெரிய ஒழுங்கற்ற திட்டுக்களை உருவாக்கும்.


இந்நோய் தீவிரமாகத் தாக்கும்போது பயிர் முழுவதும் எரிந்தது போன்று தோற்றமளிப்பதால் குலைநோய் எனப்படுகிறது. நெற்பயிரின் கழுத்துப் பகுதியில் இந்நோய் தாக்கும்போது கறுப்பு நிறமாக மாறிக் கதிர்மணிகள் சுருங்கியும், கதிர்கள் உடைந்தும் தொங்கும். 


இந்நிலையில் இது ‘கழுத்துக் குலைநோய்” எனப்படும். இந்நோய் நெற்பயிரின் கணுக்களில் தாக்கும்போது அவை கறுப்பு நிறமாக மாறி உடைந்துவிடும் நிலையானது ‘கணுக் குலைநோய்” எனப்படும்.



மேலாண்மை முறைகள்


நோயற்ற பயிரிலிருந்து விதைகளைத் தேர்வு செய்ய வேண்டும். நடவு வயலில் நோயற்ற நாற்றுகளை நடவு செய்ய வேண்டும். வயலிலும் வரப்பிலும் உள்ள களைகளை அகற்றிட வேண்டும்.


விதை நேர்த்தி


ஒரு கிலோ விதைக்கு 10 சூடோமோனாஸ் புளோரசன்ஸ் எதிர்உயிர்ப் பூஞ்சணக்கொல்லி அல்லது இரண்டு கிராம் கார்பன்டாசிம் அல்லது டிரைசைக்ளோசோல் இரசாயனப் பூஞ்சணக்கொல்லி மருந்து கொண்டு விதை நேர்த்தி செய்து கட்டுப்படுத்தலாம்.


இந்நோய்த் தாக்குதல் அதிகமாகும்போது ஒரு ஏக்கருக்கு டிரைசைக்ளோசோல் 75 றுP ஏக்கருக்கு 120 கிராம் அல்லது டெபுகோனசோல் 25.9 நுஊ ஏக்கருக்கு 300 மி.லி. அல்லது அசோஸ்க்சிட்ரோபின் 23 ளுஊ ஏக்கருக்கு 200 மி.லி. ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை 200 லிட்டர் நீரில் கலந்து தெளித்துக் கட்டுப்படுத்தலாம்.



எனவே விவசாயிகள் கோடைப்பருவத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நெற்பயிரில் குருத்துப்பூச்சி மற்றும் குலைநோய்த் தாக்குதலைக் கட்டுப்படுத்தி உயர்விளைச்சல் பெற்றிடுமாறு புதுக்கோட்டை மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் இராம.சிவகுமார் கேட்டுக்கொண்டுள்ளார்.

 

மேலும் படிக்க....


விவசாய நிலம் வைத்துள்ள சிறு குறு விவசாயிகள் ரூ.25000 மானியம் பெற விரைவாக இதனை செய்யுங்கள்!!


ரூ.3 லட்சம் விவசாயக் கடன் பெற விரைவாக இதனை செய்யுங்கள்!! KCC விண்ணப்பிப்பது எப்படி?


உர விலை உயர்வு காரணமாக விவசாயிகள் உர பயன்பாட்டை 10% முதல் 20% வரை குறைத்துள்ளனர்!!


மேலும் தொடர்புக்கு....

 

எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.

 

மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.

 

நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......

வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)

 

Time to Tips – 5

 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


Post a Comment

உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...

Previous Post Next Post