விவசாயிகளுக்கு 50% மானியத்தில் இடுபொருட்கள் வேளாண்துறை அறிவிப்பு!!
விவசாயிகளுக்கு மானிய விலையில் விதைகள் விநியோகம் செய்யப்பட உள்ளதால் தவறாது வாங்கிப் பயனடையுமாறு வேலூர் மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக வேலூர் ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- வேலூர் மாவட்டத்தில் கடந்த 2021-22 ம் வருடம் சொர்ணவாரி காரீப் பருவத்தில் சுமார் 2200 ஹெக்டேர் நெல், சிறுதானியங்கள் சுமார் 3708 ஹெக்டேரும், பயறுவகை 7702 ஹெக்டேரும், மற்றும் எண்ணெய்வித்து பயிர்கள் 14246 ஹெக்டேரும் பயிரிடப்பட்டது.
நீர் சேமிப்பு
சொர்ணவாரி நெல் சாகுபடி செய்யும் விவசாயிகள் திருந்திய நெல் சாகுபடி முறையை பயன்படுத்தி சாகுபடி செய்தால் 40 சதவீதம் அளவு நீரை சேமிக்கலாம். நெல் சாகுபடி செய்துள்ள வரப்புகளில் பயறுவகை பயிர் விதைகளை நடவு செய்தால் பூச்சி நோய் தாக்குதல் குறைவாக இருக்கும்.
செலவு குறையும்
வரப்புகளில் பயறுவகை பயிர்களில் உள்ள சாறு உறுஞ்சும் பூச்சியை உண்பதற்காக வரும் வண்டு, ஊசி தட்டான் போன்ற நன்மை செய்யும் பூச்சிகள், நெல் பயிரைத் தாக்கக்கூடிய குருத்து பூச்சி, இலை சுருட்டு புழு மற்றும் புகையான் பூச்சிகளையும் உண்கின்றன. இதனால், நெல் பயிருக்கு பயிர் பாதுகாப்பு மருந்து தெளிக்கும் செலவினம் குறையும்.
ரகங்கள்
தற்போது சொர்ணவாரி பருவத்தில் சாகுபடிக்கு தேவையான ஏற்ற ரகங்களான ஏடிடீ 37,42 கோ 51 சான்றுநிலை நெல் விதைகள், 15 மெட்ரிக் டன்கள் அனைத்து வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களிலும், துணை வேளாண்மை விரிவாக்க மையங்களிலும் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
மேலும் நெல் தவிர சிறுதானியங்கள் 7 மெட்ரிக் டன், பயறுவகை விதைகள் 15 மெட்ரிக் டன், நிலக்கடலை விதைகள் 40 மெட்ரிக் டன் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
50% மானியத்தில்
கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் மூலம் வரப்பு பயிருக்கு தேவையான அனைத்து விதைகள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. விதை கிராம திட்டத்தின் கீழ் 50 சதவீத மானியத்தில் வேளாண்மை விரிவாக்க மையத்தின் மூலம் விதைகள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
அனைத்து பயிர்சாகுபடிக்கும் தேவையான நுண்ணுட்ட மற்றும் உயிர் உரங்கள் உள்ளிட்ட விவசாயிகளுக்கு தேவையான அனைத்து இடுபொருட்கள், வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களிலும், துணை வேளாண்மை விரிவாக்க மையங்களிலும்,
மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS
போதுமான அளவு இருப்பு வைக்கப்பட்டு விவசாயிகளுக்கு மானிய விலையில் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. எனவே வேலூர் மாவட்ட விவசாயிகள் தங்களுக்கு தேவையான விதைகள் மற்றும் இடுபொருட்களை மானிய விலையில் வாங்கி பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
மேலும் படிக்க....
நிலக்கடலையில் மொட்டுக் கரிதல் நோயும் அதன் மேலாண்மை முறைகளும் பற்றிய முழு விளக்கம்!!
தொடக்க கூட்டுறவு கடன் சங்கங்களில் கடன் சிறப்பு முகாம்களை நடத்த உத்தரவு!!
100% மானியத்தில் வழங்கப்பட்ட குறுவை தொகுப்பில் புறக்கணிப்பு விவசாயிகள் குமுறல்!!
மேலும் தொடர்புக்கு....
எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.
மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.
நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......
வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


0 Comments
உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...