Random Posts

Header Ads

நிலக்கடலையில் வேரழுகல் நோயை கட்டுப்படுத்திட வேளாண்மை இணை இயக்குநர் ஆலோசனை!!



நிலக்கடலையில் வேரழுகல் நோயை கட்டுப்படுத்திட வேளாண்மை இணை இயக்குநர் ஆலோசனை!!


புதுக்கோட்டை மாவட்ட நிலக்கடலை சாகுபடியாளர்கள், நிலக்கடலை வேரழுகல் நோயினை கட்டுப்படுத்தி மகசூலினை அதிகப்படுத்திட வேளாண்மை இணை இயக்குநர் இராம. சிவகுமார் ஆலோசனை தெரிவித்துள்ளார்.


புதுக்கோட்டை மாவட்டத்தில் பெரும்பாலான வட்டாரத்தில் பரவலாக பயிரிடப்படும் நிலக்கடலையில், வேரழுகல் நோயினால் மகசூல் பெரிதும் பாதிக்கப்படுகிறது. இந்நோய், மேக்ரோபோமினா பேசியோலினா என்ற பூஞ்சான கிருமியின் தாக்குதலால் ஏற்படுகிறது. 



வேரழுகல் நோயினால் நிலக்கடலையில் 63 முதல் 100 சதவிகிதம் வரை மகசூல் இழப்புக்கு வாய்ப்புள்ளது. எனவே, வேரழுகல் நோய் பாதிப்பு இருக்கும் பகுதியில், ஒருங்கிணைந்த நோய் நிர்வாக முறைகளை கடைபிடித்தல் மிகவும் அவசியமாகும்.


நோய் சுழற்சி


மண் மற்றும் செடி சருகுகளில் இப்பூஞ்சானத்தின் வித்து வெகு நாட்களுக்கு உறக்கநிலையில் இருக்கும். இதனால் முதன்மை பாதிப்பு மண் மற்றும் விதை மூலமாக ஏற்படும். இரண்டாம் நிலை பாதிப்பு, பாசன நீர், பண்ணை கருவிகள், கால்நடைகள், மனிதர்கள் மூலம் இப்பூஞ்சானத்தின் ஸ்கிலிரோசியம் பரவி பாதிப்புகளை ஏற்படுத்தும்.


அறிகுறிகள்


வெண்மையான பூசணவித்துகள் பாதிக்கப்பட்ட செடியின் மேல்புறத்தில் காணப்படுகின்றன. செடியின் அடிப்புறத்தில் காய்ந்தும், மஞ்சள் நிறமாக மாறியும் காணப்படுகிறது. 



மேலும், பாதிக்கப்பட்ட செடியின் அடிப்புறத்தில் திசுக்கள் உதிர்ந்தும், கடுகு போன்ற சிறிய அளவு ஸ்கிலிரோசியம் பாதிக்கப்பட்ட இடத்தில் காணப்படும், நீலம் கலந்த சாம்பல் நிறமுடைய விதைகள் உண்டாகின்றன.


மேலாண்மை முறைகள்


மண்ணின் மேல் உள்ள பயிர் கழிவுகளை ஆழமாக உழவேண்டும். விதையை டிரைகோடெர்மா விரிடி ஒரு கிலோ விதைக்கு 4 கிராம் என்ற அளவில் விதை நேர்த்தி செய்து விதைக்க வேண்டும் அல்லது ஒரு கிலோ விதைக்கு 2 கிராம் கார்பன்டாசிம் பூஞ்சான கொல்லி மூலம் விதை நேர்த்தி செய்து விதைக்க வேண்டும். 


ஒரு ஏக்கருக்கு டி. விரிடி ஒரு கிலோ என்ற அளவில் 20 கிலோ தொழு உரத்துடன் கலந்து மண்ணில் சீராக விதைப்பதற்கு முன் தூவ வேண்டும். ஆமணக்கு புண்ணாக்கு அல்லது வேப்பம் புண்ணாக்கு எக்டருக்கு 200 கிலோ என்ற அளவில் பயன்படுத்தலாம். 


ஒரு லிட்டர் தண்ணீரில் ஒரு கிராம் கார்பன்டாசிம் கலந்த கரைசலை நோய் பாதிக்கப்பட்ட செடியின் அருகில் உள்ள செடிகளுக்கு வேர் பகுதி மண்ணில் நனையும்படி ஊற்றி வேர் அழுகல் நோயை மேலும் பராவாமல் கட்டுப்படுத்தலாம்.



எனவே, புதுக்கோட்டை மாவட்ட நிலக்கடலை சாகுபடியாளர்கள், ஒருங்கிணைந்த முறையில் நிலக்கடலை வேரழுகல் நோயினை கட்டுப்படுத்திடுமாறு வேளாண்மை இணை இயக்குநர் இராம.சிவகுமார் ஆலோசனை தெரிவித்துள்ளார்.


மேலும் படிக்க....


கத்தரியில் ஏற்படும் இலைப்புள்ளி நோயும் அதன் மேலாண்மை முறைகளும் பற்றிய முழு தொகுப்பு!!


இறந்த கோழிகளால் பறவை கரைசல் உரம் தயாரிப்பது மற்றும் பயன்படுத்துவது எப்படி?


PM-kisan தயாராகிறது புதிய பட்டியல் இவர்களுக்கு ஒரு பைசா கூட கிடையாது!!


மேலும் தொடர்புக்கு....

 

எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.

 

மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.

 

நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......

வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)

 

Time to Tips – 5

 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Post a Comment

0 Comments