Random Posts

Header Ads

12 வது தவணைத் தொகை இரண்டு தினங்களுக்குள் (e-Kyc) அப்டேட் வேளாண் உதவி இயக்குனர் அறிவிப்பு!!



12 வது தவணைத் தொகை இரண்டு தினங்களுக்குள் (e-Kyc) அப்டேட் வேளாண் உதவி இயக்குனர் அறிவிப்பு!!


மத்திய அரசின் பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா திட்ட பயனாளிகள் தங்கள் நிதி உதவியை செப்டம்பரில் பெறுவதற்கு இகேஒய்சி (e-KYC) செய்வது அவசியம் தஞ்சை மாவட்டம் மதுக்கூர் வேளாண் உதவி இயக்குனர் அறிவிப்பு.


PM கிசான் திட்டத்தின் கீழ் பயன்பெறும் விவசாயிகளின் 12 வது தவணைத் தொகை எவ்வித தொய்வு இன்றி பெற வேண்டும் என்றால் விவசாயிகள் தங்கள் வங்கி கணக்குடன் ஆதார் எண் இணைப்பு முகவரி சரிபார்ப்பு விவசாய நிலம் உள்ளதற்கான ஆதாரம் போன்றவற்றை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். 



இத்துடன் இகேஒய்சி (e-Kyc) யை உறுதி செய்து கொள்வது மிக மிக அவசியம். e kYC... Electronicly know your customer,. என்பதன் சுருக்கமே இகேஒய்சி (e-Kyc) என கூறப்படுகிறது. 


இதன்படி விவசாயிகள் ஒவ்வொருவரும் தங்களுடைய ஆதார் எண்ணை அவர்கள் பயன்படுத்தும் செல்பேசி எண்ணுடன் இணைத்து விவசாயிகள் அவர்களின் மொபைல் எண்ணுக்கு வரும் ஓடிபி யை  உள்ளீடு செய்து பிஎம் கிசான் போர்டலில் விவரங்கள் சரியாக உள்ளதா என உறுதி செய்து கொள்ள வேண்டும். 


இவ்வாறு இகேஒய்சி (e-Kyc) செய்யாத விவசாயிக்கு அடுத்த தவணைத் தொகை மத்திய அரசு வழங்க இயலாது. குறிப்பாக PM கிசான் தொடங்கும்போது இருந்த முகவரிதான் தற்போதும் உள்ளதா என அறிந்து கொள்ளுங்கள் இல்லாவிடில் உங்களது ஆதார் விபரங்களை வங்கிக் கணக்கில் அப்டேட் செய்து கொள்ளுங்கள் இல்லாவிடில் நிதியைப் பெறுவதில் சிக்கல் ஏற்படும்.



எனவே இகேஒய்சி (e-Kyc) அப்டேட் செய்வதற்கு விவசாயிகள் தங்களுடைய வேளாண் உதவி அலுவலர்களை அணுகி ஆன்லைனில் சரி பார்த்துக் கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது. ஆஃப்லைனில் சரி செய்து கொள்ள பொது சேவை மையத்தை அணுகவும் கேட்டுக் கொள்ளப்படுகிறது. 


இரண்டு தினங்களுக்குள் அனைத்து விவசாயிகளும் தங்கள் ஆதார் விபரங்களை இகேஒய்சி (e-Kyc) செய்து கொள்ள தடங்கலின்றி நிதி உதவி பெறுவதற்கு உரிய ஆவணங்களுடன் தங்கள் வேளாண் உதவி அலுவலரையோ வேளாண் உதவி இயக்குனர் அலுவலகத்தில் இதற்கான பணிக்கப்பட்டுள்ள அட்மா மற்றும் சிசி பணியாளர்களை உடன் உரிய ஆவணங்களுடன் அணிகிட மதுக்கூர் வேளாண் உதவி இயக்குனர் திலகவதி  வட்டார விவசாயிகளை கேட்டுக்கொள்கிறார். 


இதற்கான காலக்கெடு ஜூலை 31க்குள் முடிவடைந்துவிட்டபடியால் திங்கள் செவ்வாய் இரண்டு நாட்களுக்குள் இகேஒய்சி (e-Kyc)-யை முடித்துக் கொள்ள மதுக்கூர் வேளாண் உதவி இயக்குனர் கேட்டுக் கொண்டுள்ளார். ஏற்கனவே  இகேஒய்சி (e-Kyc) பணியை முடித்துவிட்ட விவசாயிகள் இந்த அறிவிப்பு குறித்து ஒன்றும் செய்யத் தேவையில்லை.



கீழக்குறிச்சி வேளாண் உதவி அலுவலர் ஜெரால்டு அவர்கள் PM கிசான் விவசாயிகளிடம் இகேஒய்சி (e-Kyc) பணியை முடித்திட செய்ய வேண்டிய பணிகள் குறித்து விளக்கி கூறினார்.


தகவல் வெளியீடு


S.திலகவதி,

வேளாண்மை இணை இயக்குனர், மதுக்கூர்

தஞ்சாவூர் மாவட்டம்.



மேலும் படிக்க....


வேளாண்மை துறையின் வருவாய் கோட்டத்திற்கு உட்பட்ட வேளாண் துறை அலுவலர்களின் களப்பணிகள் குறித்து ஆய்வு!!


ஊரக வளர்ச்சி துறையுடன் செயல்படுத்தப்பட உள்ள திட்டங்கள் குறித்த சிறப்பு மேலாண்மை கூட்டம்!!


நெல் அறுவடைக்குப் பின் வாத்துகளின் வரத்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்தும்!! செலவு இன்றி சாகுபடி!!


மேலும் தொடர்புக்கு....

 

எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.

 

மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.

 

நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......

வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)

 

Time to Tips – 5

 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


Post a Comment

0 Comments