மாவட்ட அளவிலான மரபுசார் பன்முகத்தன்மை கண்காட்சி மற்றும் கருத்தரங்கம்!!



மாவட்ட அளவிலான மரபுசார் பன்முகத்தன்மை கண்காட்சி மற்றும் கருத்தரங்கம்!!


அட்மா திட்டத்தின் கீழ் ஈச்சங்கோட்டை வேளாண் கல்லூரியில் நடைபெற்ற மாவட்ட அளவிலான மரபுசார் பன்முகத்தன்மை கண்காட்சி மற்றும் கருத்தரங்கம்.


தமிழ்நாடு அரசு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் மூலம் தஞ்சை மாவட்ட வேளாண் இணை இயக்குனர் ஜஸ்டின் அவர்களின் அறிவுரைப்படி மாவட்ட அளவிலான மரபுசார் பன்முகத்தன்மை கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் வேளாண் கல்லூரி ஈச்சங்கோட்டையில் அட்மா திட்டத்தின் கீழ் வேளாண் துணை இயக்குனர் பால சரஸ்வதி அவர்களால் ஒருங்கிணைக்கப்பட்டு நடைபெற்றது இவ்விழாவில் வேளாண் விஞ்ஞானிகள் அரசுத்துறை தலைவர்கள் முன்னோடி விவசாயிகள் கலந்து கொண்டனர்.


இவ்விழாவில் வேளாண் விஞ்ஞானிகள் அரசுத்துறை தலைவர்கள் முன்னோடி விவசாயிகள் கலந்து கொண்டனர். வேளாண் இணை இயக்குனர் ஜஸ்டின் தன் உரையில் பாரம்பரிய இயற்கை விவசாயத்தை ஊக்கப்படுத்துவதிலும் பாரம்பரிய ரகங்களை பாதுகாக்கும் விவசாயிகளை ஊக்கப்படுத்துவதிலும் நமது அரசு பல திட்டங்களை இதற்கென தீட்டி செயல்படுத்தி வருகிறது.



அதில் ஒன்றாகத்தான் இன்றைய தினம் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் அறிவுரைப்படி தஞ்சை மாவட்ட அளவிலான பாரம்பரிய விவசாயிகளை ஊக்கப்படுத்தும் வகையிலும் அவர்கள் வைத்திருக்கும் ரகங்கள் பிற விவசாயிகள் தெரிந்து கொள்ளும் வகையிலும் மரபு சார் பன்முகத்தன்மை கருத்தரங்கம் இன்று நடைபெற்று வருகிறது பாரம்பரிய ரகங்கள் பல்வேறு பண்புகள் கொண்டவை பல்வேறு கால வகைகளுக்கும் ஏற்றது ஆண்டு முழுவதும் பயிர் செய்ய கூடிய ரகங்கள் நம் நாட்டில் உள்ளது.


வறட்சி மற்றும் வெள்ளம் தாங்கி வளரக்கூடியவையும் உள்ளன அவற்றையெல்லாம் கண்டறிந்து விவசாயிகளுக்கு இடையே அவற்றின் சாகுபடி ஊக்குவிக்கும் நோக்கில் வேளாண் துறை நெல் ஜெயராமன் அவர்களின் பெயரில் பாரம்பரிய நெல் ரகங்களை விவசாயிகளுக்கு மானியத்தில் வழங்கி வருவதுடன் பிற விவசாயிகளும் அறிந்து கொள்ளத்தக்க வகையில் மாவட்ட அளவில் கண்காட்சியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே அனைத்து விவசாயிகளும் திட்டங்களை அறிந்து பயன்படுத்திக் கொள்ள கேட்டுக்கொண்டார்.


கருத்தரங்கத்தில் கலந்து கொண்ட ஈச்சங்கோட்டை வேளாண் கல்லூரியின் முதல்வர் வேலாயுதம் அவர்கள் மரபுசார் பல்லுயிர் பன்முகத்தன்மை பயிருக்கு பயிர் எவ்வாறு வேறுபடுகிறது என்பதை பற்றி எடுத்துக் கூறியதோடு கோவிட் 19 நோயினால் மனித சமுதாயம் முடங்கியதற்கு காரணம் மனித உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருந்தது.



ஆனால் பாரம்பரிய ரகங்களை உட்கொள்வதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்திக் கொள்ளலாம் என்று கூறினார் .மாப்பிள்ளை சம்பா போன்ற ரகங்கள் 160 நாள் பயிராக உள்ளது அதன் தன்மை மாறாமல் விவசாயிகளுக்கு மத்திய கால ரகமாக அறிமுகப்படுத்துவதற்கான ஆராய்ச்சி பணிகள் நடைபெறுவதாக எடுத்துக் கூறினார்.


அண்ணாமலை பல்கலைக்கழக இயற்கை விவசாயம் மற்றும் வளங்குன்ற வேளாண்மையின் இயக்குனர் ராமன் அவர்கள் விவசாயிகளுக்கு கவிதைகள் மூலம் மண்ணின் தன்மை கெடாமல் இயற்கை முறையில் விவசாயம் செய்வது பற்றியும் ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு பற்றியும் அழகாக எடுத்துக் கூறினார்.


தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிலையம் ஆடுதுறையின் பயிர் மரபியல் துறை பேராசிரியர் மணிமாறன் அவர்கள் பல்வேறு பாரம்பரிய நெல் ரகங்களின் குண நலன்கள் மற்றும் அவற்றின் நோய் எதிர்ப்பு திறன் பற்றி எடுத்துக் கூறினார். டாக்டர் புஷ்பா அவர்கள் பாரம்பரிய நெல் ரகங்களின் மருத்துவ குணங்கள் பற்றி எடுத்துக் கூறினார். ஈச்சங்கோட்டை பேராசிரியர் ஜெகன்மோகன் அவர்கள் பாரம்பரிய நெல் ரகங்கள் மற்றும் காய்கறி பயிர்களை சந்தைப்படுத்துதலில் உள்ள சவால்கள் மற்றும் அதனை மேற்கொள்வதற்கான வழிவகைகள் பற்றி எடுத்துக் கூறினார்.


பாரம்பரிய நெல் ரகங்களின் புவிசார் முறையில் குறியீடு செய்வதற்கான சட்ட விதிகள் அதற்கான மையங்கள் பற்றியும் உதவி பேராசிரியர் டாக்டர் பாரதி அவர்கள் எடுத்துக் கூறினார். பாரம்பரிய நெல் ரகங்களின் மருத்துவ குணங்கள் மற்றும் நாட்டு காய்கறிகளின் நன்மைகள் பற்றியும் முன்னோடி விவசாயி சித்தர் அவர்கள் எடுத்துக் கூறினார்.


புதுக்கோட்டையில் உழவர் உற்பத்தியாளர் குழு மூலம் பாரம்பரிய நெல் மற்றும் சிறுதானியங்கள் மூலம் மதிப்பு கூட்டிய பொருள்கள் தயாரித்து விற்பனை செய்யும் தலைவர் திரு ஆதப்பன் அவர்கள் பாரம்பரிய நெல் சாகுபடி செய்யும் விவசாயிகள் எவ்வாறு மதிப்பு கூட்டி அவற்றை விற்பனை செய்யலாம் அவற்றில் உள்ள இடையூறுகள் மற்றும் களைவதற்கான வழிகள் பற்றியும் எடுத்துக் கூறினார்.


பயிற்சியில் கலந்து கொண்ட அனைத்து விவசாயிகளுக்கும் மதியம் பாரம்பரிய அரிசியில் அறுசுவை உணவு தயாரித்து வழங்கப்பட்டது. மதியத்திற்கு மேல் விவசாயிகளுடன் கலந்துரையாடலும் ஈச்சங்கோட்டை வேளாண் கல்லூரி முதல் மற்றும் இரண்டாம் ஆண்டு மாணவிகளின் இயற்கை விவசாயம் குறித்த விழிப்புணர்வு நாடகங்கள் மிக அழகாக நடித்துக் காண்பித்தனர்.



கருத்தரங்கில் வேளாண் துணை இயக்குனர் மத்திய திட்டம் ஈஸ்வர் கோமதி தங்கம் மற்றும் இளஞ்செழியன் ஆகியோர் கலந்து கொண்டனர். பயிற்சிக்கான ஏற்பாடுகளை 14 வட்டார அட்மாத்திட்ட அலுவலர்கள் செய்திருந்தனர். ஈஸ்வர் அவர்கள் விவசாயிகளுக்கும் கலந்து கொண்ட விஞ்ஞானிகள் முன்னோடிகள் விவசாயிகளுக்கும் நன்றினை தெரிவித்துக் கொண்டார்.


மேலும் படிக்க....


விவசாயிகளுக்கு ரூ.200 கோடி வட்டியில்லாமல் பயிர்க் கடன் வழங்க இலக்கு நிர்ணயம்!!


PM Kisan: 12ஆவது தவணை ரூ.2000 வரவில்லையா? - இதை உடனடியாக செய்யுங்கள்!!


கும்பகோணம் விதை விற்பனை நிலையங்களில் விதை ஆய்வு அதிகாரிகள் ஆய்வு!!


மேலும் தொடர்புக்கு....

 

எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.

 

மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.

 

நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......

வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)

 

Time to Tips – 5

 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Post a Comment

0 Comments