PM Kisan புதிய மாற்றம் 12 வது தவணை ரூ.2000 இனி விவசாயிகள் வீடு தேடி வரும்!!



PM Kisan புதிய மாற்றம் 12 வது தவணை ரூ.2000 இனி விவசாயிகள் வீடு தேடி வரும்!! 


மத்திய அரசு சார்பில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் 2000 ரூபாய் தவணையை, வீட்டுக்கே நேரடியாக அனுப்புவதற்கான திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.


பிரதமர் கிசான் திட்டத்தின் கீழ் மத்திய அரசு வழங்கும் 2000 ரூபாய் நேரடியாக வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், இனி நேரடியாக வீட்டுக்கே 2000 ரூபாயை வழங்கும் திட்டத்தை இந்திய தபால் துறை அறிமுகப்படுத்தியுள்ளது.



பிரதமர் கிசான் சம்மன் நிதி திட்டம்


விவசாயக் குடும்பங்களுக்கு வருமான ஆதரவு வழங்குவதற்காக பிரதமர் கிசான் சம்மன் நிதி திட்டம் (PM Kisan Samman Nidhi Yojana) கீழ் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு தலா 6000 ரூபாய் வழங்கப்படுகிறது. இந்தத் தொகை மூன்று தவணைகளாக பிரித்து தவணைக்கு 2000 ரூபாய் என வழங்கப்படுகிறது.


கடந்த மே 31ஆம் தேதியன்று பிரதமர் கிசான் சம்மன் நிதி திட்டத்தின் 11ஆவது தவணையை பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டார். இதன் கீழ் 10 கோடிக்கு மேற்பட்ட விவசாயிகளுக்கு தலா 2000 ரூபாய் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.


நேரடியாக 2000 ரூபாய் பணம்


பிரதமர் கிசான் திட்டத்தின் சிறப்பு அம்சமே விவசாயிகளின் வங்கிக் கணக்கிற்கே நேரடியாக பணம் அனுப்பப்படுகிறது. எனவே, அவர்கள் பணத்துக்காக அரசு அலுவலகங்களுக்கு சென்று அலையத் தேவையில்லை. இடைத்தரகர்களின் அட்டூழியத்தைத் தடுக்கவே இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.



வீட்டுக்கே நேரடியாக வரும்


ஆனால், வங்கிக் கணக்கில் 2000 ரூபாய் அனுப்புவதே விவசாயிகளுக்கு பெரும் சவுகரியமாக இருந்து வருகிறது. இந்நிலையில், வீட்டுக்கே நேரடியாக 2000 ரூபாயை டெலிவரி செய்வதற்காக இந்திய தபால் துறை புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.




மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS


​ஆப்கா பேங்க், ஆப்கே துவார்


இதற்காக ‘ஆப்கா பேங்க், ஆப்கே துவார்’ (Apka Bank, Apke Dwar) என்ற திட்டத்தை இந்திய தபால் துறை அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு வழங்கப்பட வேண்டிய பிரதமர் கிசான் 2000 ரூபாய் பணம் நேரடியாக வீட்டுக்கே வழங்கப்படும். தபால் ஊழியர்கள் இந்த பணத்தை வீட்டுக்கே டெலிவரி செய்வார்கள்.

 


மேலும் படிக்க....


7 வாரங்களில் ஏக்கருக்கு 5 டன் வரை தழைசத்து தரும் மண்ணுக்கு வளமும் தரும் சணப்பு பயிர்!!


நடப்பு ரபி 2021-22 பருவத்தில் பயிர் காப்பீடு செய்ய பிரதம மந்திரியின் திருந்திய பயிர் காப்பீட்டு திட்டம்!!


PM-Kisan 11- வது தவணை 10,58,32,641 விவசாயிகளின் வங்கிக்கணக்கில் வரவு! பணம் கிடைக்காதவர்கள் உடனே இதனை செய்யுங்கள்!!


மேலும் தொடர்புக்கு....

 

எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.

 

மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.

 

நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......

வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)

 

Time to Tips – 5

 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


Post a Comment

0 Comments