இனி இவர்களுக்கு 100 Unit இலவச மின்சார திட்டம் தொடரும் அமைச்சர் முக்கிய அறிவிப்பு!!
விவசாயிகள், நெசவாளர்கள் உள்ளிட்டவர்கள் இலவச மின்சாரம், 100 யூனிட் இலவச மின்சார திட்டம் தொடரும் என அமைச்சர் செந்தில்பாலாஜி கூறியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, மத்திய அரசு கொண்டு வந்துள்ள மின்சார சட்ட மசோதாவில் விவசாயிகள், நெசவாளர்கள் உள்ளிட்டவர்கள் இலவச மின்சாரம், 100 யூனிட் இலவச மின்சாரம் பாதிக்கப்படும் என்றாலும் தமிழகத்தில் இலவச மின்சார திட்டம் தொடரும். ஒரு போதும் இந்த திட்டத்தை நிறுத்தி வைக்க மாட்டோம் என்றார்.
ஒரு சில இடங்களில் மின்வெட்டுகள்
மின்சாரத்துறை வரலாற்றில் இதுவரை இல்லாத அளவில் 1 யூனிட் கூட வீணடிக்காமல் உற்பத்தி செய்த மின்சாரம் முழுவதுமாக பயன்படுத்தப்பட்டுள்ளது. பராமரிப்பு பணி காரணமாக ஒரு சில இடங்களில் மின்வெட்டுகள் ஏற்படலாம்.
திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து இதுவரை தமிழகத்தில் மின் தட்டுப்பாடு இல்லை. கடந்த ஓராண்டில் சிக்கன நடவடிக்கையால் மின்வாரியத்தில் 2,700 கோடி வட்டி சேமிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டு புதிய திட்டங்கள் நிறைவேற்றுதல் மற்றும் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு, அந்த பகுதி மக்களிடம் பேசி கோரிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.
மேலும் படிக்க....
12 வது தவணைத் தொகை இரண்டு தினங்களுக்குள் (e-Kyc) அப்டேட் வேளாண் உதவி இயக்குனர் அறிவிப்பு!!
விவசாயிகளுக்கான இலவச மின்சாரம் ரத்தாகும் ஆபத்து? என்ன காரணம்?
75 சதவீத மானியத்தில் இயந்திர புல் வெட்டும் கருவி விண்ணப்பிக்க அழைப்பு!!
மேலும் தொடர்புக்கு....
எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.
மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.
நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......
வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


0 Comments
உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...