Random Posts

Header Ads

உர விற்பனையகங்களில் கூடுதல் விலைக்கு உர விற்பனை உரம் பதுக்கல் கடத்தல் சிறப்பு பறக்கும் படை ஆய்வு!!



உர விற்பனையகங்களில் கூடுதல் விலைக்கு உர விற்பனை உரம் பதுக்கல் கடத்தல் சிறப்பு பறக்கும் படை ஆய்வு!!


மதுக்கூர் வட்டார உர விற்பனையகங்களில் கூடுதல் விலைக்கு உர விற்பனை உரம் பதுக்கல் கடத்தல் மற்றும் விவசாயத்துக்கான யூரியா பிற நிறுவனங்களுக்கு பயன்படுத்துதல் தடுக்க மாவட்ட அளவிலான சிறப்பு பறக்கும் படை ஆய்வு. 


தஞ்சாவூர் மாவட்ட மதுக்கூர் வட்டாரத்தில் விவசாய தேவைக்காக பத்து தனியார் உரக்கடைகளுக்கும் பத்து கூட்டுறவு உர விற்பனை நிலையங்களுக்கும் உர விற்பனை உரிமம் வழங்கப்பட்டு தேவையான அளவு உரம் கொள்முதல் செய்யப்பட்டு விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. 



தற்போது சம்பா சாகுபடி முழு வீச்சில் தொடங்கியுள்ள நிலையில் விவசாயிகளுக்கு தேவையான யூரியா வாங்கும் போது உர விற்பனை நிலையங்களில் கூடுதல் விலைக்கு விற்பதோ அல்லது பிற பொருட்களை வாங்க கட்டாயப்படுத்துதல் போன்றவை குறித்து விவசாயிகளிடம் மாவட்ட அளவில் புகார்கள் வந்ததை அடுத்து வேளாண்மை இயக்குனர் அவர்களின் உத்தரவுப்படி வேளாண் இணை இயக்குனர் அவர்களின் அறிவுரை படியும் தஞ்சாவூர் மாவட்டத்தில் வேளாண் உதவி இயக்குனர் தோட்டக்கலை அலுவலர்கள் மற்றும் வேளாண் வணிகத்துறை அலுவலர்கள் கொண்ட சிறப்பு பறக்கும் படை அமைக்கப்பட்டு மாவட்டத்திலுள்ள அனைத்து கூட்டுறவு மற்றும் தனியார் உர விற்பனை நிலையங்களை திடீர் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுத்து அறிக்கையை அனுப்பிட வேளாண் இணை இயக்குனர் அவர்களால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 


அதனைத் தொடர்ந்து மதுக்கூர் வட்டாரத்தில் உள்ள அனைத்து கூட்டுறவு மற்றும் தனியார் உர விற்பனை நிலையங்களில் மதுக்கூர் வேளாண் உதவி இயக்குனர் திலகவதி தோட்டக்கலை அலுவலர் கார்த்திகா ஆகியோர் அடங்கிய குழு அமைக்கப்பட்டு அனைத்து விற்பனை நிலையங்களிலும் உர விற்பனையில் மீறுதல்கள் இருக்கின்றனவா என்பதை குறித்து ஆய்வு செய்யப்பட்டது. 



இந்த ஆய்வின் போது தனியார் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் தேவைக்கு உரங்கள் வைக்கப்பட்டுள்ளதா அதிக விலைக்கு உரங்கள் விற்பனை செய்யப்படுகிறதா உர கடத்தல் பதுக்கல் மற்றும் விவசாயத்திற்கான யூரியா உரம் பிற தொழிலுக்கு பயன்படுத்தப் படுகின்றனவா போன்ற உரக்க்கட்டுப்பாட்டு ஆணை 1985 க்கு புறம்பான செயல்கள் ஏதும் நடைபெறுகிறதா என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது . 


இந்த ஆய்வின்பொழுது விற்பனை முனைய கருவி பழுதான நிலையில் உர விற்பனை மேற்கொண்ட இரண்டு கூட்டுறவு உர விற்பனையகங்கள் மற்றும் ஒரு தனியார் விற்பனை நிலையத்தின் மீது எச்சரிக்கை தபால் வழங்கப்பட்டது.


மேலும் அனைத்து உர விற்பனை நிலையங்களிலும் உர மூட்டைகளின் எடை சரியாக உள்ளதா என்பதும் ஆய்வு செய்யப்பட்டது .மேலும் காலாவதியான உரங்கள் மற்றும் உர மூட்டைகள் தற்போதைய உரங்களுடன் சேர்த்து வைக்கப்பட்டுள்ளனவா என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டது. 



மேற்கண்ட ஆய்வின்போது துணை வேளாண்மை அலுவலர் அன்புமணி  அட்மா திட்ட அலுவலர் ராஜு ஆகியோர் உடன் ஆய்வில் இருந்தனர்.


தகவல் வெளியீடு


S.திலகவதி,

வேளாண்மை இணை இயக்குனர், மதுக்கூர்

தஞ்சாவூர் மாவட்டம்.


மேலும் படிக்க....


PMFBY பாதிக்கப்படும் விவசாய பயிர்களுக்கு இழப்பீடு பெற காப்பீடு செய்யுங்கள் வேளாண்துறை அழைப்பு!!


அங்கக வேளாண்மையில் திறன் மேம்பாட்டு பயிற்சி! ஒரு மாத கால இலவச பயிற்சி!!


சம்பா பருவத்திற்கு ஏற்ற நெல் இரகங்கள் நுண்ணூட்டங்கள் 50% மானிய விலையில் விநியோகம்!!


மேலும் தொடர்புக்கு....

 

எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.

 

மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.

 

நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......

வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)

 

Time to Tips – 5

 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Post a Comment

0 Comments