தஞ்சாவூர் மாவட்டதில் சம்பா பருவ விதை நெல் குறித்து விதை விற்பனை நிலையங்களில் அதிகாரிகள் குழு ஆய்வு!!



தஞ்சாவூர் மாவட்டதில் சம்பா பருவ விதை நெல் குறித்து விதை விற்பனை நிலையங்களில் அதிகாரிகள் குழு ஆய்வு!!


தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் விதை விற்பனை நிலையங்களில் மதுரை விதை ஆய்வு துணை இயக்குனர் முருகேசன் அவர்களது தலைமையிலான அதிகாரிகள் குழுவினர் இன்று (23.09.22) ஆய்வு மேற்க்கொண்டார்கள்.


சென்னை விதைச்சான்று மற்றும்  அங்ககசான்று துறை இயக்குனர் அவர்களது உத்தரவின்படி, தஞ்சாவூர் மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் விதை விற்பனை நிலையங்களில் மதுரை விதை ஆய்வு துணை இயக்குனர் கே.பி.முருகேசன் தலைமையிலான அதிகாரிகள் குழுவினர்  சம்பா பருவ நெல் விதைகளின் இருப்பு மற்றும் வினியோகம் குறித்த திடீர்ஆய்வு மேற்கொண்டனர்.



மாவட்டத்தில், நடப்பு சம்பா பருவத்தில், நெல் நாற்றங்கால் மற்றும் நடவு பணிகளில் விவசாயிகள் முழுவீச்சுடன் ஈடுபட்டு வருகின்றனர். விதைப்புக்கு தேவையான வரப்பெற்ற நெல் விதைகள், அனைத்து அரசு வேளாண்மை விரிவாக்க நிலையங்கள் மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற தனியார் விதை விற்பனை நிலையங்கள் மூலம் இருப்பு வைக்கப்பட்டு, விற்பனை செய்யப்பட்டு வருவதை தஞ்சாவூர், கும்பகோணம், அம்மாபேட்டை, ஒரத்தநாடு, பாபநாசம், பட்டுக்கோட்டை  பகுதிகளில் உள்ள விதை விற்பனை நிலையங்களில்  ஆய்வு மேற்கொண்டனர்.  


விதை சட்டப்படி விதைகள் விற்பனை செய்ய வழங்கப்பட்ட விதை உரிமங்கள், சம்பா பருவ விதைகள் இருப்பு, கொள்முதல் செய்யப்பட்ட விதைகளின் இன்வாய்ஸ், விவசாயிகளுக்கு வழங்கப்படும் ரசீதுகள் என ஆய்வு மேற்கொண்டனர். 



விவசாயிகள் உரிமம் பெற்ற விதை விற்பனையாளர்களிடம் ரசீது பெற்று விதைகளை வாங்கி பயன்படுத்த வேண்டும் என்றும் விதை விற்பனை உரிமம் பெறாமல் விதை விற்பனை செய்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தனர். 


இந்நிலையில், தனியார் விதை விற்பனையாளர்கள் விதை விற்றதற்கான ரசீது, விவசாயிகளுக்கு கட்டாயம் வழங்க வேண்டும். ரசீது இல்லாமல் விற்றாலோ, கூடுதல் விலைக்கு விற்பனை செய்தாலோ விதைச்சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார். 


தொடர்ந்து, சம்பா பருவத்தில் நல்ல முளைப்பு திறன் உள்ள தரமான நீண்ட கால வயதுடைய விதைகள் ஆன சி.ஆர்.1009,  சி.ஆர் 1009 சப் 1, கோ 43 மற்றும் மத்திய கால ரகங்களான ஏடிடீ 39, ஏடிடீ 46, ஏடிடீ 42 மற்றும் தாளடி பருவ ரகங்களான ஏடிடீ 37, ஏடிடீ 45, கோ 51, டிபிஎஸ் 5, ஏஸ்டி 16 போன்றவற்றை விதை ஆய்வாளர்கள் விதை மாதிரிகள் எடுத்து விதை ஆய்வகத்திற்கு அனுப்பும் பணியில் ஈடுபட்டு வருவதாகவும், விதை விற்பனையாளர்கள், நெல் விதைகளின் முளைப்பு திறனை கட்டாயம் உறுதி செய்த பின்னர் மட்டுமே விவசாயிகளுக்கு விதை விற்பனை செய்ய வேண்டும் என  தனது செய்திக்குறிப்பில் தஞ்சாவூர் விதை ஆய்வு துணை இயக்குனர் தெரிவித்துள்ளார். 



மாவட்டத்துக்குட்பட்ட 22 விதை விற்பனை நிலையங்கள் ஆய்வு செய்யப்பட்டு விதை சட்ட விதிமீறல்கள் கண்டறியப்பட்ட நிலையங்களில், 11 எண்ணிக்கையிலான விதை குவியல்களில், ரூ. 6.63 லட்சம் மதிப்புள்ள 17.95 மெ.டன் விதைகள் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டது. இந்த ஆய்வின் போது விதை ஆய்வாளர்கள் ராஜபாண்டி, அகிலா, மணிமாறன், பாலையன், நவீன்சேவியர் மற்றும் சத்யா ஆகியோர் உடன் இருந்தனர்.



மேலும் படிக்க....


ஒரு எக்டர் நஞ்சை நிலம் இருந்தால் பண்ணையம் அமைக்க ரூ.50,000 மானியம் அறிவிப்பு!!


சம்பா நெல் பயிர் காப்பீடு!! பயிர் காப்பீடு செய்ய ரூ.2339 கோடி வேளாண்துறை அறிவிப்பு!!


நிலமற்ற விவசாயிகள் விவசாய நிலம் வாங்க ரூ.5 லட்சம் மானியம் தமிழக அரசு அறிவிப்பு!!


மேலும் தொடர்புக்கு....

 

எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.

 

மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.

 

நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......

வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)

 

Time to Tips – 5

 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Post a Comment

0 Comments