தமிழ்நாடு அரசு வேளாண்மை துறையின் மூலம் விவசாயிகளுக்கு டிராக்டர்கள் கொத்து கலப்பைகள் மற்றும் பண்ணை குட்டைகள்!!


மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் வேளாண் துறையின் புதிய திட்டம் மற்றும் தோட்டக்கலைத் துறை மூலம் தென்னையில் பரப்பு விரிவாக்கம் திட்டம் குறித்து சட்டமன்ற உறுப்பினர்களுடன் அனைத்து துறை தலைவர்கள் சந்திப்பு.


தமிழ்நாடு அரசு வேளாண்மை துறையின் மூலம் முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டம் என்ற புதிய திட்டம் விவசாயிகளுக்கு 50% மானியத்தில் நுண்ணுயிர் உரங்கள் மற்றும் நெல் நுண்ணூட்டம் வழங்குதல் போன்ற முக்கிய திட்டங்களும் வேளாண் பொறியியல் துறை மூலம் குறைந்த வாடகையில் விவசாயிகளின் பயன்பாட்டிற்காக டிராக்டர்கள் கொத்து கலப்பைகள் வழங்குதல் மற்றும் இளைஞர்களுக்கு டிராக்டர் இயக்க பயிற்சி போன்றவை வட்டார அளவில் செயல்படுத்தப்பட உள்ளன மேலும் தோட்டக்கலைத் துறை மூலம் தென்னையில் பரப்பு விரிவாக்கம் மானியத்தில் செயல்படுத்தப்பட உள்ளது.



மாண்புமிகு முதலமைச்சர் மற்றும் வேளாண் துறை அமைச்சர் துவக்கி வைத்துள்ள திட்டங்கள் குறித்து மாவட்ட அளவிலான விவசாயிகள் சார்ந்த வேளாண் துறை தோட்டக்கலை துறை வேளாண் பொறியியல் துறை, வேளாண் விற்பனை துறை மற்றும் மார்க்கெட் கமிட்டி சார்ந்த துறை தலைவர்கள் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களை நேரடியாக சந்தித்து இந்த நிதியாண்டில் உடனடியாக செயல்படுத்தப்பட உள்ள அனைத்து மானிய திட்டங்கள் மற்றும் அது செயல்படுத்தப்படும் விதம் போன்றவை குறித்து நேரடியாக எடுத்துக் கூற அறிவுறுத்தியதை தொடர்ந்து,


இன்று வேளாண் துணை இயக்குனர் மத்திய திட்டம் ஐயம்பெருமாள் மதுக்கூர் மற்றும் பட்டுக்கோட்டை வேளாண் உதவி இயக்குனர் திலகவதி பட்டுக்கோட்டை தோட்டக்கலை உதவி இயக்குனர் வேளாண் பொறியியல் துறை செயற்பொறியாளர் செங்கோல் மற்றும் பட்டுக்கோட்டை மார்க்கெட் கமிட்டி கண்காணிப்பாளர் வேதமுத்து ஆகியோர் நேரடியாக பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் திரு அண்ணாதுரை அவர்களிடம் அவரவர் துறையின் திட்டங்கள் குறித்து நேரடியாக எடுத்துக் கூறினர்.



சட்டமன்ற உறுப்பினர் வேளாண் துறையின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களில் விவசாயிகளுக்கான கள அளவிலான இடர்பாடுகள் போன்றவை பற்றியும் கேட்டறிந்தார். விதைஆய்வாளர் நவீன் குறுவை தொகுப்பு திட்டம் மற்றும் மற்றும் விவசாயிகளுக்கான குறுவை விதை தேவை போன்றவை பற்றி எடுத்து கூறினார்.


மதுக்கூர் துணை வேளாண்மை அலுவலர் அன்புமணி பசுந்தாளுர போஸ்டர்கள் மற்றும் திருந்திய நெல் சாகுபடி உளுந்து சாகுபடி குறித்த தஞ்சை மாவட்ட வேளாண் இணை இயக்குனரின் துண்டு பிரசுர வெளியீடுகளை பட்டுகோட்டை சட்டமன்ற உறுப்பினர் அவர்களிடம் வழங்கினார்.


தமிழ்நாடு அரசு வேளாண்மை துறையின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் கையேட்டினை வேளாண் துணை இயக்குனர் மத்திய திட்டம் அய்யம்பெருமாள் பட்டுகோட்டை சட்டமன்ற உறுப்பினர் அண்ணாதுரை அவர்களிடம் வழங்கினார்.


தகவல் வெளியீடு

S.திலகவதி,

வேளாண்மை உதவி இயக்குனர், மதுக்கூர்

தஞ்சாவூர் மாவட்டம்.


மேலும் படிக்க....



விவசாயிகளே இனி கவலை வேண்டாம்! மஞ்சள் வண்ண ஒட்டுப்பொறி பூச்சிகளையும் பிடிக்கும் பூச்சிகளையும் கண்காணிக்கும்!!


விதை முதல் அறுவடை வரை தேவையான அனைத்து இடுபொருட்களும் 50 சத மானியத்துடன் முன்னுரிமை!!


பயிர்களில் ஏற்படும் நோய் தாக்கங்கள் பற்றிய வேளாண் கண்காட்சி !!


மேலும் தொடர்புக்கு....

 

எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.

 

மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.

 

நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......

வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)

 

Time to Tips – 5

 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Post a Comment

உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...

Previous Post Next Post